மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மலையேற்றம் செல்வதை ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தி உள்ளன.
2024 நவம்பர் முதல் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை கிலோமீட்டர் 9 துாரம் வனத்துறையினர் மூலம் மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டம் துவங்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்ட மக்களும் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து மலையேற்றம் சென்று வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் மலையில் அதிகரிக்கதுவங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் மலையேற்றம் செல்வதை ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தி உள்ளன.
0
Leave a Reply